அங்காரா/டமாஸ்கஸ், பிப். 13 - மத்திய கிழக்கு நாடான துருக்கி யின் காசியான்டெப் மாகாணத்தில் கடந்த வாரம் அடுத்தடுத்து 3 முறை நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் - துருக்கி எல்லை பகுதி நகரங்கள், அகதிகள் முகாம்கள் உருக்குலைந்தன. எங்கு பார்த்தாலும் கட்டிட இடிபாடுகள், இடிபாடுகளில் சிக்கி சிதைந்த உடல்கள், சொந்தங் களை இழந்து கதறும் பொதுமக்களின் கூக்குரல் என துருக்கி - சிரியா பகுதி கள் சோகம் நிறைந்த காட்சிகளால் துவண்டு போயுள்ளன. வரலாறு காணாத நிலநடுக்கத் தால் துருக்கி - சிரியாவில் உயிரிழந் தோர் எண்ணிக்கை 36 ஆயிரத்தை (36,217) கடந்துள்ளது. அதிகபட்சமாக துருக்கியில் 31,643 பேர் உயிரிழந்துள்ள தாக துருக்கி அவசரநிலை ஒருங்கிணைப்பு மையமான சாக்கோம் (SAKOM) தகவல் தெரிவித்துள்ளது. சிரியாவில் நேட்டோ படையினரின் ஆக்கிரமிப்பு பகுதிகளில் 3,160 பேரும், அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் 1,414 பேரும் என மொத்தம் 4,574 பேர் உயிரிழந்துள்ளதாக சிரிய செய்தி நிறுவனமான சனா (SANA) தகவல் தெரிவித்துள்ளது.
பலி 70 ஆயிரத்தை கடக்கும் அபாயம்
துருக்கியில் 60% மீட்பு பணி மட்டுமே நிறைவடைந்துள்ளது. துருக்கியைப் போன்று சிரியாவில் மீட்பு பணியை மேற்கொள்ள உலக நாடுகள் செல்லவில்லை என்பதால் எல்லைப் பகுதி ராணுவ வீரர்கள், பத்திரிகை யாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரால் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் சிரியாவில் எத்த னை சதவீதம் மீட்பு பணி நிறை வடைந்துள்ளது என திடமாக செய்தி கள் வெளியாகாத நிலையில், துருக்கி - சிரியாவில் பலி 70 ஆயிரத்தையும் கூட கடக்கலாம் என ஐநா அச்சம் தெரி வித்துள்ளது.
கவலைக்கிடமான நிலையில் சிரியா
துருக்கிக்கு ஐநா மற்றும் உலக நாடுகளின் உதவி கணிசமாக கிடைத்து வரும் நிலையில், அமெரிக்கா ஏவிய ஆக்கிரமிப்புப் போரில் சிக்கியுள்ள சிரியா பேரிடர் மீட்பு உதவி மற்றும் நிவாரண உதவிகளுக்கு ஏங்கி வரு கிறது. அரசு கட்டுப்பாட்டு பகுதியில் ஓர ளவு நிவாரணம் கிடைத்து வருகிறது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ ராணுவத்தின் கீழ் உள்ள பகுதிகளில் எவ்வித உதவியும் இல்லா மல் திண்டாடி வருகிறது. ஏற்கெனவே மேற்குலக பொருளாதாரத் தடை, உள்நாட்டுப் போர், போதிய மருத்து வக் கட்டமைப்பு வசதியில்லாத சிரியா தற்போது நிலநடுக்கத்தால் மிகவும் மோசமான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
ஐநா ஒப்புதல்
சிரியாவுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்ட உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் வெளியிட்டுள்ள அறிக்கை யில்,”சிரியாவில் உள்நாட்டுப் போர், கொரோனா பாதிப்பு, காலரா, பொரு ளாதார நெருக்கடியுடன், நிலநடுக்க மும் சேர்ந்துள்ளது. சிரியா மீண்டெழ இன்னும் அதிகமான உதவிகள் தேவை. மேலும் சிரியாவிற்கு நிவார ணப் பொருட்களை கொண்டு சேர்ப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது கவலை அளிக்கிறது. துருக்கி, சிரியா வில் சுமார் 8.70 லட்சம் மக்கள் போதிய போஷாக்கான, சூடான உணவிற்காக காத்திருக்கின்றனர்” என அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் உதவி
சிரியாவின் பாப் அல் ஹவா எல்லை வழியாக வடமேற்கு சிரியாவிற்கு 10 டிரக்குகளில் தற்காலிக கூடாரங் களுக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. ஆனால் இவை மட்டும் போதாது என களப் பணியாளர்கள் கூறி வரும் நிலை யில், சிரியாவுக்கு ஐக்கிய அரபு அமீ ரகம் பல மில்லியன் டாலர் நிதியும், நிவாரணப் பொருட்களும் அறி வித்துள்ளது. மேலும் சிரியாவிற்கு உலக நாடுகள் தாராளமாக உதவி செய்ய வேண்டும் என்பது தான் அந்நாட்டு மக்களின் ஏக்கமாகவும் ஐநா வலியுறுத்தியுள்ள நிலையில், #SyriaNeedsHelp என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.